துயரத்தின் உச்சம்... தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம் பெண் பரிதாப பலி... தோழி உயிர் ஊசல்.!



the-young-woman-who-tried-to-cross-railway-track-was-hi

சென்னை தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது இளம் பெண் மின்சார ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் யாழினி (23) மற்றும் செல்சியா (23). தோழிகளான இவர்கள் இருவரும் ஊரப்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊரப்பாக்கம் ரயில்வே நிலையத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

tamilnaduஅப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் வருவதைக் கண்டு தண்டவாளத்தின் ஓரத்தில் ஒதுங்கி இருக்கின்றனர். அப்படி இருந்தும் ரயில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் செல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

tamilnaduபடுகாயம் அடைந்த யாழினியை மீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த செல்சியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.