சொத்து கேட்ட கணவனை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி..!

சொத்து கேட்ட கணவனை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி..!



The wife strangled her husband in rage after asking for property.

சொத்து கேட்டு அடித்து துன்புறுத்திய கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்னை போலீசார் கைது செய்தனர். 

திருவொற்றியூர், ராயபுரம் சோமு செட்டி தெருவில் குடியிருப்பவர் சரவணன் (40). இவருடைய மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் ராயபுரத்தில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று காலை குடி போதையில் இருந்த சரவணன் மனைவி முத்துலட்சுமியிடம் தஞ்சாவூரில் உள்ள உனது சொத்தை பிரித்து பணத்தை வாங்கி கொண்டு வா என்று கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி போதையில் இருந்த கணவனை அங்கிருந்த பனியன் துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி அவரது கணவரின் தம்பி சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கணவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாமி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் அடிப்படையில் ராயபுரம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி மட்டவைத்தனர். 

மேலும் இது பற்றி முத்துலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரித்த போது முத்துலட்சுமி அளித்த வாக்குமூலம;- என் கணவர் தஞ்சாவூரில் உள்ள என் சொத்தை விற்று பணத்தை கொண்டு வருமாறு தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தி வந்தார். இன்று எனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியதால், ஆத்திரத்தில் பணியனால் அவர் கழுத்தை நெரித்தேன் அதனால் அவர் இறந்து போனார் என்று காவல்துறையினரிடம் கூறினார். எனவே முத்துலெட்சுமியை காவல்துறையினர் கைது செய்தனர்.