போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய திருடர்கள் தப்பி ஓட்டம்.! போலீசார் வலைவீச்சு..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்னும் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர், பஞ்சாலப்பட்டு பகுதியில் கோல்ட் சில்வர் கவரிங் ஜுவல்லரி கடை ஒன்று உள்ளது. அங்கு அதிகாலை நேரத்தில் சுமார் 2 கிலோ வெள்ளியை திருடியுள்ளார்கள்.
பின், கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்துள்ளார் கடையின் உரிமையாளர் பிரவீன்.
ஆனால், அவர் வருவதற்கு திருடர்கள் சற்று நொடிகளில் பைக்கில் பாய்ந்து விட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, காவல் துறையை கத்தி காட்டி மிரட்டி தப்பி சென்ற திருடர்களை தேடி வருகிறது.