மனைவியை கத்திரிக்கோலால் குத்தி விட்டு... தலைமறைவான கணவர்... கைது செய்த போலீசார்...!!

மனைவியை கத்திரிக்கோலால் குத்தி விட்டு... தலைமறைவான கணவர்... கைது செய்த போலீசார்...!!



the-police-arrested-the-absconding-husband-who-stabbed

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்(38). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக, ஆறு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் பிரியாவை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். பிரியா அவருடன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

tamil nadu

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அங்கிருந்த கத்திரிக் கோலை எடுத்து பிரியாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். பிரியாவின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். 

பின்னர் பிரியாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.