கொடுமையின் உச்சகட்டம்... டார்ச் லைட்டை பெண்ணுறுப்பில்... கணவரின் கொடூரச் செயல்... பறிபோன மனைவியின் உயிர்.!

கொடுமையின் உச்சகட்டம்... டார்ச் லைட்டை பெண்ணுறுப்பில்... கணவரின் கொடூரச் செயல்... பறிபோன மனைவியின் உயிர்.!



the-peak-of-cruelty-the-husbands-desire-during-sex-the

விருதுநகர் மாவட்டத்தில் கணவன் மற்றும் மனைவி இடையே உடலுறவின் போது  கணவரின் விபரீத ஆசையால் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர்  தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில அமைந்துள்ள அத்தி கோவில் மலை என்ற பகுதியைச் சேர்ந்தவர்  வனம் என்ற வனராஜ்(50). இவருக்கு திருமணம் ஆகி  இரண்டு மனைவிகளை பிரிந்த நிலையில் மூன்றாவதாக இரண்டு குழந்தைகளின்  தாயான எஸ்லானி (எ) உமா (28)  என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்த வனராஜ் தனது மனைவி மற்றும் அவரது குழந்தைகளுடன்  தோட்டத்தில் தங்கியிருக்கிறார்.

tamilnadu

இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகள் உறங்கச் சென்ற பின்னர் கணவன் மற்றும் மனைவி  இருவரும் தனியாக மோட்டார் அறைக்கு உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வன ராஜ்ஜியம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tamilnadu

இந்த சம்பவம் தொடர்பாக வனராஜ் கூறிய வாக்குமூலம் காவல்துறையினர் அதிரசெய்திருக்கிறது. நேற்றிரவு இருவரும் உறங்கச் செல்லும் முன் மது அருந்திவிட்டு உடலுறவு ஈடுபட்டுள்ளனர். அப்போது வன ராஜிக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால் டார்ச் லைட்டை தனது மனைவியின் பெண்ணுறுப்பில் செலுத்த ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு அவரது மனைவி மறுத்து இருந்தாலும் மது போதையில் இவர் விடாமல் செலுத்தி இருக்கிறார். அதனால் அவரது மனைவி இரத்தப்போக்கு ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை வனராஜை கைது செய்து சிறையில் அடைத்தது..