தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்த கணவன்...!! தொல்லை தாங்காமல் தீர்த்து கட்டிய மனைவி, மகன்கள்..!!

தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்த கணவன்...!! தொல்லை தாங்காமல் தீர்த்து கட்டிய மனைவி, மகன்கள்..!!



The husband who used to drink and leave everyday... The wife and sons who solved the problem and built it..

குடித்துவிட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்த கணவனை, மனைவி மற்றும் இரு மகன்கள் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்குத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன் (47). இவர் ஒரு கூலி‌த் தொழிலாளி. இவருக்கு போதுமணி என்ற மனைவி மற்றும் சூர்யா, சுகன் என்ற இரு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.

மகள் திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டார். மூத்த மகன் சூர்யா தனது குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இளைய மகன் சுகன் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந் நிலையில் பாலமுருகன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் குடித்து விட்டு வந்து வழக்கம் போல மனைவி மற்றும் மகன் சூர்யாவிடமும், வெளியூரில் இருந்து வந்திருந்த மகன் சுகனிடமும் தகராறு செய்துள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை கயிற்றால்  நெறித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு பாலமுருகன் தூக்கு மாட்டி இறந்து விட்டதாக அனைவரிடமும் கூறியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து சித்தார்பட்டி கிராம நிர்வாக அலுவலர், பாலமுருகனின் சாவில் மர்மம் இருப்பதாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மனைவி மற்றும் இரு மகன்களையும்  அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலமுருகனை மனைவி மற்றும் இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்து தற்கொலை போல் நாடகம் ஆடியது தெரிய வந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.