ராஜ்குமார், சிவாஜி, கமல், ரஜினி, ஜெமினி உட்பட பலருடன் நடித்த, பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்..!
திருமணம் நடந்த அன்று இரவே மணமகன் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை..!!
திருமணம் நடந்த அன்று இரவே மணமகன் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை..!!

சுரேஷ்குமார் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ் குமார் (30). வீடுகள், நிறுவனங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு புதுச்சேரி அருகில் இருக்கும் காலாப்பட்டு முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
மாலை வரவேற்பு நிகழ்ச்சி கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அங்கு இருந்த கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்கி இருந்தனர். அப்போது போது மாப்பிள்ளை சுரேஷ்குமார் உடை மாற்றிக் கொண்டு வருவதாக அறைக்குள் சென்றார். உடைமாற்ற சென்ற சுரேஷ்குமார் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால், உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மயங்கி கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சுரேஷ்குமாரை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் கூறினர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் நடந்த அன்றே மணமகன் இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.