கள்ளக்காதலியின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்!.. உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி..!

கள்ளக்காதலியின் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்!.. உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி..!


The girl's grandmother was an accomplice in the sex torture of a counterfeiter's daughter

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியை  சேர்ந்தவர் உண்ணி என்கிற டிஜேஷ் (38). இவர் கூலி தொழிலாளி.  இவருக்கும், குமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 15 வயதுடைய ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து டிஜேஷ் அருமனை பகுதிக்கு வந்து அந்த பெண்ணுடன் வசித்து வந்தார். அவர்களுடன் பெண்ணின் தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு வேறொரு வாலிபருடன் சென்றார். அதன்பின்பு குழந்தைகளை டிஜேசும், அந்த பெண்ணின் தாயாரும் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் டிஜேஷ் கள்ளக்காதலியின் மகளான 15 வயது சிறுமிக்கும், சிறுமியின் தம்பிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சிறுமி தனது பாட்டியிடம் கூறி அழுதார். அதற்கு பாட்டி, 'வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்' என்று கூறி டிஜேசுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இதற்கிடையே, சம்பவத்தன்று டிஜேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் பார்த்தார். அவர் டிஜேசை தட்டி கேட்டுள்ளார். டிஜேஷ் அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதையடுத்து சிறுமி பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியுடன் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் டிஜேஷ் மீதும், சிறுமியின் பாட்டி மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.