இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய உறவுக்கார பெண்; தகாத உறவால் விளைந்த விபரீதம்...!!

இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய உறவுக்கார பெண்; தகாத உறவால் விளைந்த விபரீதம்...!!



The concubine who poured boiling oil on the youth; Misfortune caused by improper relationship...

திருமணமான, சொந்தக்கார பெண்ணுடன், தகாத உறவு வைத்திருந்த இளைஞர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், அந்த இளைஞர் மீது சூடான பாமாயிலை அந்தப் பெண் ஊற்றியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் கார்த்திக். இவர் பெருந்துறையில் இருக்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் இவரது சொந்தக்கார பெண்ணான மீனாதேவி என்ற திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாக மீனாதேவியிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை பவானி மண்டபம் வீதியில் இருக்கும் மீனாதேவி வீட்டில், மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மீனாதேவி, கார்த்திக் மீது அடுப்பில் இருந்த சூடான பாமாயிலை ஊற்றியுள்ளார்.

சூடான பாமாயிலை ஊற்றியதால், முகம் மற்றும் கழுத்து பகுதியில், பலத்த காயமடைந்த கார்த்திக், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பவானி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து மீனா தேவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.