நாளை ரேஷன் கடைகள் இயங்குமா?; அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!
நாளை ரேஷன் கடைகள் இயங்குமா?; அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!
மகளிருக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான படிவங்களை நியாய விலைக்கடைகள் மூலமாக பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
நியாய விலைக்கடை பணியாளர்கள் அதற்கான படிவத்தை பயனாளர்களிடம் இருந்து பெற்று வருகின்றனர். இன்று அரசு விடுமுறையை தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரேஷன் கடைகள் விடுமுறை என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல இயங்கும் எனவும், நியாய விலைக்கடை பணியாளர்கள் தங்களின் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளுக்கு பதிலாக வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.