தமிழகத்துக்கு 2 நாள் ரெட் அலா்ட்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.!

தமிழகத்துக்கு 2 நாள் ரெட் அலா்ட்! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.!



tamilnadu - pondichery - red alert - india vanilai

தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து சுட்டெரிக்கும் வெயில் ஆனது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்கள் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியப் பெருங்கடல்-வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தில் 30 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

vanilai

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் கடற்கரை பகுதிகளில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 30 , மே 1 ஆகிய இரு தினங்களுக்கு ரெட் அலெர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள புதிய புயலுக்கு  ஃபனி புயல் (Fani Cyclone) என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.