#BREAKING: சற்று முன்... குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்! முதல்வர் விஜய்யின் சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விதி 110-ன் கீழ் வெளியிட்ட இந்த அறிவிப்பு, 2027-ம் ஆண்டு பொங்கல் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற உள்ளன.
2027 பொங்கல் முதல் இலவச சிலிண்டர்
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவை குறைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 LPG சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். 2027 பொங்கல் பண்டிகை முதல் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் வெளியிட்ட சென்னை நாள் கொண்டாட்ட வீடியோ..!!!
ரூ.2.5 லட்சம் வருமான வரம்பு
இந்த இலவச சிலிண்டர் திட்டம் அனைத்து குடும்பங்களுக்கும் பொதுவாக வழங்கப்படாது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் மட்டுமே திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் நடைமுறை தொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.30 கோடி குடும்பங்களுக்கு பயன்
மாநிலம் முழுவதும் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வால் குடும்ப பட்ஜெட்டில் ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகள் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அவசரப்பட்டுடோமோ... ஆலோசனையே இல்லாமல் இப்படி ஒரு முடிவு! கசிந்த சீக்ரெட்.... பரபரப்பில் அரசியல் களம்!!!