தாயின் இறப்பை தாங்க முடியாமல், 12 வருஷத்திற்கு பின் மகன் செய்த காரியம்.! இறுதியாக இன்ஸ்டாகிராமில் போட்ட உருக்கமான பதிவு!!

தாயின் இறப்பை தாங்க முடியாமல், 12 வருஷத்திற்கு பின் மகன் செய்த காரியம்.! இறுதியாக இன்ஸ்டாகிராமில் போட்ட உருக்கமான பதிவு!!


son-commits-suicide-due-to-mother-dead-after-12-year

சென்னை தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரஞ்சிதா என்ற மகளும், ராஜி என்ற மகனும் உள்ளனர். ராஜி தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். செல்வி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜி தாயின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் 12 ஆண்டுகளாகவே அவரது நினைவில் வாடி வந்துள்ளார். 

மேலும் ஒரு வாரமாக தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம், என் அம்மாவின் நினைப்பாகவே உள்ளது அவரை பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது என கூறி வந்துள்ளார். அவருக்கு அனைவரும் சமாதானம் கூறி ஆறுதல்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ராஜி வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் எழுந்ததும் தனது தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு அவரது அக்கா கதறி துடித்துள்ளார்.

suicide

தற்கொலைக்கு முன்பு ராஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது அம்மா என்னை அழைக்கிறார். நான் அவரை பார்க்க வேண்டும் என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாய் இறந்த சோகம் தாங்க முடியாமல் 12 ஆண்டுகள் கழித்து மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.