நடுரோட்டில், தாய் என்றுகூட பாராமல் மானபங்கப்படுத்திய மகன்! குடிபோதையில் நடந்த அட்டூழியத்தால் அதிர்ச்சி!
நடுரோட்டில், தாய் என்றுகூட பாராமல் மானபங்கப்படுத்திய மகன்! குடிபோதையில் நடந்த அட்டூழியத்தால் அதிர்ச்சி!
நாகர்கோவில் அருமனை அருகேயுள்ள பன்னவிளைப்பகுதியை சேர்ந்தவர் வினோத். 35 வயது நிறைந்த இவர் குடிக்கு அடிமையாக இருந்துள்ளார். மேலும் அவர் அவ்வபோது தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் மீண்டும் தனது தாயிடம் வந்து குடிப்பதற்கு பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார் இந்நிலையில் அவர் தனது மகனுக்கு தெரியாமல் பணத்தை தனது மேலாடையில் மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் மிகுந்த போதையில் இருந்த வினோத் தனது தாய் என்று கூட பார்க்காமல் தனது தாயின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளார்.
மேலும் கழுத்தை இறுக்கி, கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து ண்டு வினோத்திடமிருந்து அவரது தாயை மீட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.