தாலிக்கட்ட மறுத்த காதலன்! காதலி எடுத்த அதிரடி முடிவு! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?

தாலிக்கட்ட மறுத்த காதலன்! காதலி எடுத்த அதிரடி முடிவு! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?



Sivakasi

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(25).இவர் அரூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதே நேரத்தில் அந்த வங்கியில் உயர் அதிகாரியாக வேலை பார்த்து வந்த அருண்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக அருண்குமார், ராஜேஸ்வரியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் திருமணம் குறித்த ராஜேஸ்வரியின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

sivakasi

இந்நிலையில் ஒரு நாள் அருண்குமாருக்கு வரன் பார்ப்பதாக ராஜேஸ்வரியின் தோழிகள் கூறியுள்ளார். அதனை அடுத்து ராஜேஸ்வரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.

இதனால் காதலி ராஜேஸ்வரி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது நீ எனக்கு தாலிக்கட்டவில்லை என்ற நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ அதிகம் பகிரப்படவே போலீசார் அருண்குமாரை அழைத்து பேசியுள்ளனர்.

அதனை அடுத்து அருண்குமார் திருமணம் செய்ய ஒப்பு கொண்டுள்ளார். அதன் பிறகு இருவீட்டிலும் உள்ள உறவினர்கள் சிலரை அழைத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.