இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார்.. வாலிபர் தூக்கி வீசப்பட்டு மரணம்.!

இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார்.. வாலிபர் தூக்கி வீசப்பட்டு மரணம்.!


sivagangai-car-and-bike-accident

சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் ஜான் திரவியம் என்ற ஒரு பாதிரியார் மதுரையில் இருந்து திருவாடானை நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது முப்பையூர் பகுதியிலுள்ள மதுரை-தொண்டி சாலையில் இவரது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத தருணத்தில் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், பாதிரியார் தனது காரின் வேகத்தை குறைக்க முடியாமல் அவர் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இதில் வாகன ஓட்டியான சேவியர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

sivagangai

பின் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்த தேவகோட்டை காவல்துறையினர் சேவியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.