சொத்து தகராறு: மனநலம் குன்றிய தம்பியை அடித்து கொன்ற அக்கா.. அதிர்ச்சியூட்டும் பரபரப்பு பின்னணி..!

சொத்து தகராறு: மனநலம் குன்றிய தம்பியை அடித்து கொன்ற அக்கா.. அதிர்ச்சியூட்டும் பரபரப்பு பின்னணி..!



sister-killed-her-brother-due-to-property-dispute-in-ch-HPB95P

சோழவரம் அருகே சொத்துக்காக சொந்த அக்காவே மனநலம் குன்றிய தம்பியை அடித்து வீட்டுக்குள் வைத்து பூட்டியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 41வயதான பூபாலனுக்கு திருமணமாகவில்லை அதனால் தனியாக வசித்து வந்தார்.

சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன் கடந்த சில மாதங்களாக மனநலம் குன்றி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

பூபாலனுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவருடைய அக்காவான தனலட்சுமிக்கும் இடையே அவ்வப்போது சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடிசை வீட்டின் அருகே சுமார் 4 சென்ட் இடம் உள்ளது அந்த இடத்திற்காக அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது. அண்மையில் தனது அக்கா கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காக பூபாலன் ஜெயிலில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார்.

இன்று காலை வீட்டில் பலத்த காயங்களுடன் பூபாலன் இறந்து கிடந்தது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அக்கா தனலட்சுமி குடும்பத்தினர் நேற்று பூபாலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியுள்ளனர்.  காயமடைந்த பூபாலன் உரிய சிகிச்சை, குடிநீர், உணவு ஏதும் கிடைக்காமல் ப பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பூபாலனை அடித்து கொன்ற அக்கா தனலட்சுமி, அவரது கணவர் ரவி ஆகிய இருவரையும் சோழவரம் காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.