அதிர்ச்சி.. உடல் நலக்குறைவால் பலியான தந்தை.. குடும்பத்தை நடத்தி வந்த தம்பியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. பரிதவிக்கும் குடும்பம்.!

அதிர்ச்சி.. உடல் நலக்குறைவால் பலியான தந்தை.. குடும்பத்தை நடத்தி வந்த தம்பியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. பரிதவிக்கும் குடும்பம்.!



Shocked..Father died due to physical illness..His brother who was running the family also committed suicide by jumping in front of the train..Grieving family..!

திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருபவர் சங்கர்லால். இவரது தந்தை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் வறுமையில் அவதியுற்று பள்ளி செல்லாமல் இருந்த சங்கர்லாலுவை அவரது உறவினர்கள் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருப்பூரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் சங்கர்லால் வேலை செய்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

young boy

இதனையடுத்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சங்கர்லால் திருப்பூர் பாரபாளையம் பகுதியில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.