பரபரப்பு... திமுக நகரத் துணைச் செயலாளர் குடும்பத்துடன் தற்கொலை.! காவல்துறை தீவிர விசாரணை!



shock-in-namakkal-dmk-city-deputy-secretary-committed-s

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்  திமுக கவுன்சிலராக இருந்த பெண் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திமுக நகர துணைச் செயலாளராக இருந்து வந்தவர்  அருண் லால்(53). இவரது மனைவி தேவிப்பிரியா நாமக்கல் 13வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். முத்து மகள்  பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.  இளைய மகள்  மோனிஷா  ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

tailnadu இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வராததால்  சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தின் ஆரி அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர் அப்போது அருளால் அவரது மனைவி தேவி பிரியா மற்றும் மகள் மோனிஷா மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

tailnaduசம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம்  ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தான் குடும்பத்தோடு தற்கொலை  செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. திமுக கவுன்சிலர் அவரது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.