பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!



Shahid Afridi affected by corona

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ  தொடங்கிய கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகினர்.

இந்தநிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  

கராச்சியில் நேற்று தொடங்கிய 7-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாட உள்ளார். கொரோனா காரணமாக அவர் தொடக்ககட்ட ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.