வீட்டில் அறிவியல் ஆராய்ச்சி.. வெடித்து சிதறி பள்ளி மாணவன் பரிதாப பலி!

வீட்டில் அறிவியல் ஆராய்ச்சி.. வெடித்து சிதறி பள்ளி மாணவன் பரிதாப பலி!



Science experiment school boy death in Chennai

சென்னையில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது வெடித்து சிதறியதில் 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குளத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்யா பிரணவ் என்ற மாணவன் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அறிவியலில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் வீட்டில் அறிவியல் சோதனை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த இலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்து கரும் புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பகுதி மக்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது பெற்றோர் வீட்டில் தனது மகன் அறிவியல் சோதனை செய்ததாகவும், அதனால் புகை வந்ததாக கூறியுள்ளனர்.

chennai

இந்த நிலையில் நேற்று மதியம் மாணவரின் வீட்டில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மாணவர் தரையில் விழுந்து சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து வந்து போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி குறைந்த பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் செய்த சோதனையில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.