கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!



school college leave for rain

கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால் பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

heavy rain

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்வதால் விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம்,வேலூர் , சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.