தனியார் பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கயவர்கள்!!

கோவையை அடுத்த காரமடையில் உள்ள ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் பெற்றோர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்த தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சிறுமிக்கு கொடூரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் செய்து கைது செய்தனர்.
தினமும் பள்ளி பேருந்தில் வரும் சிறுமி மற்ற மாணவிகள் இறங்கிய பின்னர் கடைசியில் தான் தனது வீட்டிற்கு இறங்கி செல்வார். இதனை பயன்படுத்தி தான் சிறுமியை இரண்டு அயோக்கியன்களும் சிறுமியை கொடுமை படுத்தியுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஓட்டுநர் கோவிந்த ராஜ், உதவியாளர் மாரிமுத்து இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.