#Breaking: RPX Exchange-ல் முதலீடு செஞ்சிருக்கீங்களா?.. மொத்தமும் போச்சு.. பட்டை நாமம் போட்ட கேடி கும்பல்.!

#Breaking: RPX Exchange-ல் முதலீடு செஞ்சிருக்கீங்களா?.. மொத்தமும் போச்சு.. பட்டை நாமம் போட்ட கேடி கும்பல்.!



RPX Exchange Forgery

இன்டெர்னட் வளர்ந்த நாட்களில் இருந்து சைபர் குற்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீப காலமாகவே வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம், சிறு முதலீடு செய்து தினமும் சம்பாதிக்கலாம் என்ற பெயரில் பல வாட்சப் குழுக்கள் மூலமாக பலரையும் இணைத்து மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சமீபத்தில் வாட்சப் செயலி மூலமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு ரூ.1000 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் RPX என்ற நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். 

100 க்கும் மேற்பட்ட வாட்சப் குழுக்களில் குழுவுக்கு தலா 500 பேர் என மொத்தமாக 50 ஆயிரம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரத்திற்கு முன்னதாக அதிகளவு விளம்பரப்படுத்தப்பட்ட RPX முதலீடு நிறுவனத்தை 5 பேர் மட்டுமே நடத்தியுள்ளனர். மேலும், புதிய நபரை யாரேனும் இணைத்தால், அவருக்கு கூடுதலாக கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RPX Exchange

இப்படியாக ஒருவரை தொட்டு ஒருவர் என மொத்தமாக 50 ஆயிரம் பேர் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் இலட்சங்கள் வரை என மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்தோர் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த RPX கும்பல் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஒருவாரமாக ரூ.10 ஆயிரம் சேர்ந்து இணைந்தோருக்கு ரூ.1000 நாளொன்றுக்கு வழங்கப்பட்ட நிலையில், 4 நாட்கள் பணம் கொடுத்த கும்பல் அடுத்தடுத்த நாட்களில் மேற்படி ஆட்களை சேர்க்க வைத்து பணம் வந்ததும் வாட்சப் குழுவில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளது.