காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 5 பேர் உயிரிழப்பு!!

காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 5 பேர் உயிரிழப்பு!!



Road accident in tharapuram area 5 members died

தாராபுரம் அருகே காரும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழனியிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 5 உயிரிழந்துள்ளனர்.

Road accident

விபத்தில் சிக்கிய ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.