தமிழகத்துக்கும் "ரெட் அலர்ட்"!. மக்களே உஷார்!.

தமிழகத்துக்கும் "ரெட் அலர்ட்"!. மக்களே உஷார்!.


red alart for tamilnadu


தமிழகத்தில் வரும் 7-ம் தேதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அடைமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக்தில் அக்டோபர் 7-ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.