காதலில் தொடங்கி மூவர் கும்பலால் சீரழிக்கப்பட்ட சிறுமி; வீடியோ எடுத்து மிரட்டி நடந்த கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.!



Ramanathapuram young Girl Raped by 3 Man Team 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் 19 வயது பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "எனக்கு, 18 வயது கீழ் இருந்தபோது தன்னுடன் பயின்ற சந்துரு (வயது 20) எண்வரின் அறிமுகம் ஏற்பட்டது.

பலாத்காரத்தை வீடியோ எடுத்த இளைஞன்:

அவர் என்னை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். இந்த விஷயத்தை எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து, அதனை தனுஷ் என்பவருக்கும் பகிர்ந்து அவரும் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். 

வீடியோ பகிரப்பட்டு நடந்த கொடுமை:

அதனைத்தொடர்ந்து, இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 17 வயது சிறுவனும் பலாத்காரம் செய்தார். என்னை தொடர்ந்து மிரட்டுகிறார்கள். இவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி 2 இளைஞர்களை கைது செய்த நிலையில், 17 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.