அலெர்ட்.. ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை வெளுத்துவாங்கப்போகும் மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

அலெர்ட்.. ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை வெளுத்துவாங்கப்போகும் மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



rainfall-alert-for-tamilnadu

தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், 20-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 21-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கணித்துள்ளது.

tamilnadu

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையானது 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 20-ஆம் தேதியிலிருந்து 23-ஆம் தேதி வரை தென்மேற்கு வங்ககடல், இலங்கை கடலோர பகுதி ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் மற்றும் குமரிகடல் பகுதியில் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகம்வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.