இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை..! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை..! இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்.!



Rain update for Tamil Nadu

புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பல பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர தமிழகத்தில் லேசானதுமுதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rain update

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 22 ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், ஜூலை 20 மற்றும் 21 தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.