வெப்ப சலனம் காரணமாக இன்று மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை உள்ளிட்ட, கடலோர பகுதிகளில் லேசான மழையும், மற்ற இடங்களில், வறண்ட வானிலையும் நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் போன்ற வானிலை நிகழ்வுகளினால் தமிழகத்துக்கு வட கிழக்கு பருவமழை காலத்தில் மழை கிடைத்து வருகிறது.
இந்தநிலையில், வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல இடங்களில், பகலில் மிதமான வெயிலும், இரவு முதல் அதிகாலை வரை பனி நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.