அடுத்த 3 மணி நேரத்திற்கு.. கொட்டி தீர்க்கவுள்ள மழை.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

அடுத்த 3 மணி நேரத்திற்கு.. கொட்டி தீர்க்கவுள்ள மழை.. வெளியான முக்கிய அறிவிப்பு.!



Rain for Next 3 hours in oct 22 2023 weather report

சமீப காலமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

rain

அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு தமிழகத்தின் கீழ்காணும் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மதிய நேரம் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

அதுபோல காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.