#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மொத்தமாக 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மொத்தமாக 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.!



Rain Alert Tamilnadu 19 Dec 2023 Morning 7 AM 

 

தென் தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்களை அடைமழை வெளுத்து வாங்கியது. கடந்த 1991ம் ஆண்டுக்கு பின்னர் வெளுத்து வாங்கிய பேய்மழையின் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுச்சேரி - காரைக்கால்  மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, காலை 10 மணிவரையில் கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மிதமான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.