4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு.!



Pudukkottai minor girl Rape Case Judgement 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாழமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து (63).

இவர் கடந்த 2023 ம் ஆண்டு 4 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றார். இந்த விஷயம் தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றவாளிக்கு தண்டனை உறுதி:

இந்நிலையில், அவரின் மீதான குற்றம் உறுதியாகி மாரிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.