முத்து செய்த செயலால் விஜயாவின் காலில் விழுந்த தம்பதிகள்! மேலும் பரிசு...சிறகடிக்க ஆசை புரோமொ காட்சி!
#Breaking: கனிமவளக்கொள்ளை கொலை விவகாரம்; காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், வெண்களூர் கிராமத்தில் வசித்து வந்த ஜெகபர் அலி (வயது 58) என்பவர், முன்னாள் அதிமுக கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளராக இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு அனுமதியின்றி நடைபெற்று வந்த கல்குவாரி முறைகேடு தொடர்பாக தொடர் புகார் அளித்து வந்தார். மதுரை நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்தார்.
காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம்
கனிமவளக்கொள்ளை தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வந்தவரை, கடந்த ஜனவரி 17 அன்று லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் காசிநாதன் (வயது 45), ராசு (வயது 54), ராசுவின் மகன் தினேஷ் (வயது 28), கல்குவாரி உரிமையாளர் ராமையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: மாமனார் - மாமியார் வெட்டிக்கொலை; திருநெல்வேலியை நடுங்க வைத்த இரட்டைக்கொலை.!
இந்த வழக்கு விவகாரம் மிகப்பெரிய அதிரலையை உண்டாக்கிய நிலையில், திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன், வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: செல்போன் மாயமான தகராறில் பயங்கரம்; தொழிலாளி கழுத்தறுத்து கொலை.!