சினிமா ஆசையில் வந்து விபச்சாரத்தில் சிக்கிய இளம்பெண்கள்!! திடுக் தகவல்!

சினிமா ஆசையில் வந்து விபச்சாரத்தில் சிக்கிய இளம்பெண்கள்!! திடுக் தகவல்!



Prostitute in Chennai Veppur

சென்னை வேப்பேரியில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து விபச்சார தடுப்பு போலீசார் அன்று இரவு லாட்ஜில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

அங்கு இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வெளி மாநிலத்தை சேர்ந்த மூன்று இளம் பெண்கள் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களை மீட்ட போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்ததாகவும், இந்த ப்ரோக்கரிடம் சிக்கி இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ராஜஸ்தானை சேர்ந்த புரோக்கர் ஜம்பார் பூரி என்னும் 31 வயது நபரை போலீசார் கைது செய்தது. மேலும் மூன்று இளம் பெண்களும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.