சொத்து தகராறு... தம்பியை போட்டு தள்ளிய அண்ணன்.. போலீசார் கைது விசாரணை..!

சொத்து தகராறு... தம்பியை போட்டு தள்ளிய அண்ணன்.. போலீசார் கைது விசாரணை..!



property-dispute-brother-who-pushed-his-brother-police

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் சொத்து தகராறு காரணமாக தம்பியை உருட்டு கட்டையால் அண்ணன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சகோதரர்களான பொன் மாடசாமி- முத்துராஜ். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பொன்மாடசாமியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் முத்துராஜ் போதையில் சென்று அவரது மனைவி முத்துமாரியுடன் சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Property Dispute

 இதனால் பதறிப்போன முத்துமாரி செல்போன் மூலமாக அவரது கணவரான பொன்மாடசாமிக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக உருட்டு கட்டையுடன் வந்த பொன்மாடசாமி தனது தம்பியான முத்துராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொன்மாடசாமி தான் கொண்டு வந்த உருட்டு கட்டையால் முத்துராஜின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொன்மாடசாமியின் மீது வழக்கு பதிவு  செய்துள்ளனர். மேலும் போலீசார்க்கு பயந்து பதுங்கி இருந்த பொன் மாடசாமியை இன்று அதிகாலை போலீசார் கைது செய்துள்ளனர்.