சொத்து தகராறு... தாய் மாமனால் கொலை செய்யப்பட்ட அண்ணன், தம்பி.. ஈரோட்டில் பயங்கரம்..!

சொத்து தகராறு... தாய் மாமனால் கொலை செய்யப்பட்ட அண்ணன், தம்பி.. ஈரோட்டில் பயங்கரம்..!



property-dispute-brother-brother-killed-by-mother-in-la

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக சொந்த தாய்மாமனே அண்ணன் மற்றும் தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு முனிசிபல் காலனியில் வசித்து வருபவர் லோகநாதன். இவருக்கு கார்த்திக் மற்றும் கௌதம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் மற்றும் கௌதமிற்க்கும் அவரது சொந்த தாய்மாமனான ஆறுமுகசாமி என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தாய்மாமனுடன் கார்த்திக் மற்றும் கௌதம் சொத்து காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Property Dispute

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தாய்மாமன் ஆறுமுகசாமி தான்மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக் மற்றும் கௌதமை சரமாரியாக  குத்தியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலைக்கு காரணமான தாய்மாமன் ஆறுமுகசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.