திருச்சி அருகே பெண் டாக்டர் தற்கொலை... காவல்துறை தீவிர விசாரணை.!

திருச்சி அருகே பெண் டாக்டர் தற்கொலை... காவல்துறை தீவிர விசாரணை.!



physiotherapist-commits-suicide-in-trichy-police-enquir

திருச்சியில் லால்குடி பகுதியை சேர்ந்த  பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெடுஞ்சாலக்குடி பகுதியைச் சேர்ந்த  விவசாயி பெரியசாமி இவரது மகள் அன்பரசி வயது 27. பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான இவர் திருச்சி உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

tamilnaduஇவருக்கும் திருச்சி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஈரோட்டை சேர்ந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் அன்பரசிக்கு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். அப்போது தங்கள் காதல் விவகாரம் பற்றி அவர் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை பார்ப்பதை பெற்றோர் கைவிட்டனர். சில நாட்கள் கழித்து அன்பரசிக்கும் அவரது காதலனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படவே இருவரும் பேசுவதை நிறுத்தினர். இதனால் அன்பரசி தனது பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை பார்த்த பெற்றோர் நிச்சயதார்த்தமும் முடித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்திருக்கிறது.

tamilnaduஇந்நிலையில் தனது காதலனுடன் மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார் அன்பரசி. இது தொடர்பாக அவரை பெற்றோர் கண்டித்து இருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த  அன்பரசி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். மயக்க நிலையில் இருந்த அவரை வீட்டு பெற்றோர் லால்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அன்பரசி. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.