புயல் சமயத்தில் புயல் போல் அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை.!

புயல் சமயத்தில் புயல் போல் அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை.!



petrol price increased

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் நாடு முழுவதும் கடும் நிதிச்சுமை ஏற்பட்ட  நிலையில், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டிருந்தது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வந்தது.

petrol

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் அதிகரித்து 85.59 ரூபாய்க்கும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து 78.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.