#Breaking: சிவகங்கை மாவட்ட பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

#Breaking: சிவகங்கை மாவட்ட பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!



perambalur-pudukkottai-district-school-college-leave

 

கனமழை காரணமாக இன்று (நவ.11) 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 3 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டது.

Perambalur

இந்நிலையில், கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைப்போல சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.