காதல் திருமணம் செய்த ஜோடி வீடு புகுந்து கடத்தல்.. திரைப்பட பாணியில் பரபரப்பு சம்பவம்.. தந்தை உட்பட 9 பேர் கைது.!

காதல் திருமணம் செய்த ஜோடி வீடு புகுந்து கடத்தல்.. திரைப்பட பாணியில் பரபரப்பு சம்பவம்.. தந்தை உட்பட 9 பேர் கைது.!



parents-kidnapped-love-marriage-couples

கரூர் மாவட்டம் ஜல்லிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் என்கிற காளியப்பன். இவர் அருகாமையில் உள்ள ஆலமரத்துப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இது குறித்து தங்களது பெற்றோரிடம் கூறும்போது, அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த 26ஆம் தேதி வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து திருமணம் முடித்த கையோடு பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் பெண்ணை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், மணமக்கள் இருவரும் கார்த்திக்கின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளனர்.

ஆனால், பெண்ணின் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தும், அவர்கள் திருமணம் செய்து வந்ததால் கோபத்துடன் இருந்துள்ளனர். தாம் இவ்வளவு கூறியும் மீண்டும் திருமணம் செய்துள்ளனர் என ஒரு ஆதங்கத்தில் நேற்று நள்ளிரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

Karur

மேலும், இரண்டு ஆம்னி வேனில் வந்த மர்ம கும்பல் கார்த்திக் மற்றும் கோமதி ஆகிய இருவரையும் கடத்தி சென்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினரிடம் கார்த்திக்கின் உறவினர் ஒருவர் புகாரளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணமக்கள் இருவரையும் மீட்டதுடன், கடத்தி சென்ற பெண்ணின் தந்தை உட்பட 9 பேர் கைது செய்துள்ளனர்.