Emotional Video: முதல் முதலாக சொந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பெற்றோர்.. இந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை..!
பெற்றோர் மகிழ்ந்த இனிய வீடியோ வைரலாகி வருகிறது.
என் தலைமுறை போச்சு, முந்தின தலைமுறை கொடுத்ததும் நம்வசம் இல்லை, நீயாவது படிச்சு நல்லபடியா உன் குடும்பத்தை நிம்மதியோடு பார்த்துக்கோ என்பதுதான் உழைக்கும் மக்களின் ஒற்றை குரலாக இருக்கிறது. சிறுவயதில் இருந்து தான் எதிர்கொண்ட துயரங்களை தனது பிள்ளையும் எதிர்கொள்ள கூடாது என ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளை தங்களால் இயன்ற கஷ்டங்களை தாங்கிக்கொண்டு படிக்க வைக்கின்றனர்.
வீடு வாங்கினார்:
குழந்தைகளும் வளரும்போதே சமூகத்தில் இருக்கும் மாற்றங்களை நன்கு புரிந்துகொண்டு, தனக்கான இலக்கை மனதில் நிறுத்தி முன்னேறி வருகின்றனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த கிருபாகரன் ராஜேந்திரன் என்ற நபர், தனது சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளார். பெற்றோர் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததில் தொடங்கிய அவரின் வாழ்க்கை ஓட்டம் ஐடி பணியாளராக தொடர்ந்துள்ளது. பின் முதலீடுகள் செய்து படிப்படியாக முன்னேறியவர், கடந்த ஆண்டு சென்னையில் வீடு வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.25 லட்சம் சம்பள வேலையை விட்டு உணவு டெலிவரி வேலைக்கு சேர்ந்த இளைஞர்.. சாதகங்களும், பாதகங்களும்.!
That priceless moment when my parents saw the home for the first time. No amount of property vs mutual fund excel calculation can beat this ROI.
— Kirubakaran Rajendran (@kirubaakaran) February 2, 2026
Buying a home is an emotional decision, am glad that I decided to withdraw my profits and made this purchase. https://t.co/aX6iaP7x5K pic.twitter.com/BKp9tO7Oy5
பெற்றோர் மகிழ்ச்சி:
இந்த வீட்டுக்கு தனது பெற்றோர் முதன் முதலாக வந்தபோது, அந்த மகிழ்ச்சியை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது வைரலாகி வருகிறது. அந்த பெற்றோரின் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தினசரி வேலை பார்த்து கிருபாகரனை பெற்றோர் படிக்க வைத்ததாகவும், ஐடி நிறுவன வேலை, முதலீடுகள் என பணம் சம்பாதித்து, இஎம்ஐ போன்ற விஷயங்கள் இன்றி வீடு வாங்கியுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தனிமனிதனின் வாழ்க்கையில் இலக்கை அடைவது எளிதில்லை என்றாலும், அதில் எத்தனை போராட்டம் வந்தாலும், அதனை கடந்து வெற்றிபெற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளக்கியுள்ள நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. காத்திருப்பும், இலக்கை நோக்கிய பயணமும் எப்போதும் முக்கியம்.
:)