மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு.! ஓ.பி.எஸ்ஸின் கருத்தால் குஷியில் சசிகலா ஆதரவாளர்கள்.! கலக்கத்தில் எடப்பாடி டீம்.!!

மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு.! ஓ.பி.எஸ்ஸின் கருத்தால் குஷியில் சசிகலா ஆதரவாளர்கள்.! கலக்கத்தில் எடப்பாடி டீம்.!!



ops-speech-in-christmas-festival

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். 

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. சசிகலாவுடன் பேசிய அதிமுக-வினர் மீது கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. மேலும், சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் அவ்வப்போது கருது தெரிவித்து வந்தனர்.

ஆனால் அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் மனநிலை உள்ளதாக கருத்துக்கள் எழுந்தன. மேலும் பல முறை சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக கருது தெரிவித்து வந்தார். ஆனால் எடப்பாடி அணியினர்  சசிகலாவை சேர்க்கவே கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்தநிலையில், சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி தகவலை சொன்னார். அதாவது, தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று தெரிவித்துள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அணியினர் கலக்கத்தில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.