மூதாட்டியின் வாயை பொத்தி, கட்டி வைத்து இளைஞர்கள் செய்த கொடூர சம்பவம்.!

மூதாட்டியின் வாயை பொத்தி, கட்டி வைத்து இளைஞர்கள் செய்த கொடூர சம்பவம்.!



old-woman-house-robbery-in-covai

கோவை மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூர் அருகே முரளி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் 66 வயதான இவரது மனைவி கோமளம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மூதாட்டி கோமளம் தனியாக தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

Covai

அப்போது திடீரென உள்ளே புகுந்த 2 இளைஞர்கள் மூதாட்டியின் வாயை பொத்தி,  கை கால்களை கட்டி வைத்தனர். இதனிடையே மூதாட்டி கோமளம் கத்தி கூச்சலிட முயன்றும் அவரால் முடியவில்லை. இதில், மூதாட்டியை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து அவரது உறவினர் இரவு உணவு கொடுக்க வந்தபோது வீடு உள்ளே ஊட்டி இருப்பதை பார்த்து அச்சமடைந்தார். அப்போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கோமளத்தை கட்டி வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்தவர்களை கத்தி அழைத்துள்ளார்.

Covai

இதனையடுத்து கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் மற்றும் லிக்னேஸ்வரன் என்பது தெரியவந்தது.