இனி மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தலாம்... அமைச்சர் செந்தில் பாலாஜி...!

இனி மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தலாம்... அமைச்சர் செந்தில் பாலாஜி...!


now-you-can-pay-electricity-bill-once-a-month-minister

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டண மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மின் கணக்கீடு செய்யும் ஊழியர்கள் பணியிடம் 50 சதவீதம் காலியாக உள்ளது. 

எனவே மாதாந்திர கணக்கீடு தாமதம் ஆகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கு டெண்டர் விடும் வேலையை தொடங்கியுள்ளதால், விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். 

மேலும் கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டை. அதிமுக கோட்டையல்ல, அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாததை போல் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். என்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.