எடப்பாடியில் சினிமா பாணியில் கடை உரிமையாளரை கடத்த முயன்ற வடமாநில இளைஞர்கள்.! ஒன்றுகூடிய பொதுமக்கள்.! பரபரப்பு சம்பவம்.!

எடப்பாடியில் சினிமா பாணியில் கடை உரிமையாளரை கடத்த முயன்ற வடமாநில இளைஞர்கள்.! ஒன்றுகூடிய பொதுமக்கள்.! பரபரப்பு சம்பவம்.!



north indians kidnapped shop owner

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபி. இவரது அத்தை மகன் பரத் என்பவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த   5 பேரிடம் சுமார் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.  இந்தநிலையில், பணம் கொடுத்த அந்த 5 பேரும் பரத்தை தேடிவந்தனர்.

இதனையடுத்து பரத் எடப்பாடியில் உள்ள தனது உறவுக்காரரான கோபி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக வடமாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து எடப்பாடிக்கு வந்த அந்த  5 பேரும் பரத்தை ஒப்படைக்கும்படி கோபியிடம். கேட்டுள்ளனர். அதற்கு கோபி மறுத்ததால் அவர்கள் 5 பேரும் கோபியை அடித்து காரில் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

அப்போது கோபி அலறல் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காரில் கோபியை கடத்த முயன்ற ஐந்து வடமாநிலத்தவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்டைத்தனர். இதனையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் கடை உரிமையாளரை வடமாநிலத்தவர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.