கணவர் இறந்த துக்கத்தில், 3 மணிநேரத்தில் உயிரைவிட்ட மனைவி; நாமக்கல்லில் கண்ணீர் சோகம்.!

கணவர் இறந்த துக்கத்தில், 3 மணிநேரத்தில் உயிரைவிட்ட மனைவி; நாமக்கல்லில் கண்ணீர் சோகம்.!



  Namakkal Kumarapalayam Aged Couple Death 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 68). இவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 67). தம்பதிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று நாராயணனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். கணவரின் மரணத்தை அறிந்த ராஜேஸ்வரியும் மனசோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார். 

Latest news

கணவரின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வீட்டிற்கு வந்து இறுகின்ற்னர். இதனிடையே, நாராயணன் உயிரிழந்த 3 மணிநேரத்தில் ராஜேஸ்வரியும் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். 

தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.