#Breaking: இருசக்கர வாகனம் - டாடா ஏஸ் வாகனம் மோதி பயங்கர விபத்து; 3 பள்ளி மாணவர்கள் நிகழ்விடத்தியிலேயே பலி.!

#Breaking: இருசக்கர வாகனம் - டாடா ஏஸ் வாகனம் மோதி பயங்கர விபத்து; 3 பள்ளி மாணவர்கள் நிகழ்விடத்தியிலேயே பலி.!



Nagapattinam 3 Students Died an Accident 

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ் வேளூர் பகுதியில் டாடா ஏஸ் வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பள்ளி மாணவர்கள், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது.

முதற்கட்ட தகவலில் மேற்கூறிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விபத்தில் பலியானோர் & காயமடைந்தோர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.