தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.? இன்று வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.? இன்று வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு.!



mk stalin meeting for extending the curfew

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 736 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேபோல் நேற்று 9 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு நாளை 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  

இன்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.