நீங்களும் மதுஅருந்துபவரா? குடிக்க பணம் தராததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு?

நீங்களும் மதுஅருந்துபவரா? குடிக்க பணம் தராததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு?



Men suicide for drinking alcohol

தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகியுள்ளார். மது பழக்கத்தால் நாம் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமளையே பல குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூரை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தாய் மதுகுடிக்க பணம் தராததால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட  இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. 

health issues

பிரகாஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயுடன் வசித்து வந்த பிரகாஷ், வேலைக்கு செல்லாமல் குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது தாயிடம் பிரகாஷ் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் மது குடிக்க பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரகாஷ் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.